

அலட்டல் இல்லாத கதை
பூ படம் பார்த்தேன் ! கடைசி வரை ஆர்வம் கொஞ்சம்கூட குறையாமல் பார்க்க வைத்தது.பாக்யராஜிற்குப் பிறகு நான் அசந்து வியந்த திரைக்கதை!
படம் ஆரம்பிக்கும் போதே தெரிந்து போகிறது கதாநாயகி மாரி ,தான் காதலித்த தங்கரசுவைக் கலியாணம் செய்து கொள்ளவில்லை என்று !இருந்தாலும் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் பார்க்க வைக்கிறது படம்.சொல்லப் போனால் அதிக சுவாரசியத் துடன் பார்க்க வைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
இரண்டு சினேகிதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு
காதலை சொல்லியிருக்கும் உத்தியைப் பாரட்ட வேண்டும்.பாதி படம் வரைக்கும் தங்கராசு மாரியைக் காதலிக்கிறானா என்கிற கேள்வியை நம் மனதில் படபடக்கவைத்திருப்பதும் டைரக்டர் சசியின் வெற்றிதான் !
காதலை சொல்லியிருக்கும் உத்தியைப் பாரட்ட வேண்டும்.பாதி படம் வரைக்கும் தங்கராசு மாரியைக் காதலிக்கிறானா என்கிற கேள்வியை நம் மனதில் படபடக்கவைத்திருப்பதும் டைரக்டர் சசியின் வெற்றிதான் !
எல்லோருமே இயல்பாக இருக்கிறார்கள் ! இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்,நடிப்பு மாதிரியே தோன்றவில்லை!!ஆர்பாட்டம் இல்லாமல் இவ்வளவு அழகாக சினிமாவில் கதை சொல்ல முடியுமா........முடிந்திருக்கிறது சசியால் !காதல் தோல்வியில் கூட அந்த மாரி ,அவன் மேல் வைத்த பாசத்தைத்தான் பார்க்கிறாள் !
படத்தின் முடிவில் ...............என் கருத்து கொஞ்சம் வேறுபடுகிறது !கடைசியில் தங்கராசுவைப் பார்துவிட்டு வந்த மாரி தன் வீட்டில் உட்கார்ந்தோ அல்லது பனை மரத்தடியில் தனியாக உட்கார்ந்தோ அழுவது போல் முடித்திருந்திருக்கலாம் !அவள் கணவன் முன்பு எதுவும் பேசாமல் அழுகிறாள் என்னும் முடிவு கொஞ்சம் ............அந்தப் பாத்திரத்தின் பெருமமையைக் குறைக்கிறது
கண்மூடித்தனமான காதல் கொண்ட ஒரு பெண் ,தான் கொண்ட காதல் நிறைவேறாமல் போனால் கூட,
தன் காதலன் நன்றாக இருக்க வேண்டும் என்று அவன் மேல் கொண்ட பாசத்தில் நினைக்கிறாள்,மனதாற இன்னொரு திருமணம் செய்து கொள்கிறாள் ......இதெல்லாம் இயக்குனரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் !இன்றைய சமுதாயத்திற்கு தேவையான சிந்தனைகள் !
பொருப்பான இயக்குனர் சசியை பாரட்டுகிறேன் !நேரில் சந்திக்கவும் ஆசைப்படுகிறேன் !!
கண்மூடித்தனமான காதல் கொண்ட ஒரு பெண் ,தான் கொண்ட காதல் நிறைவேறாமல் போனால் கூட,
தன் காதலன் நன்றாக இருக்க வேண்டும் என்று அவன் மேல் கொண்ட பாசத்தில் நினைக்கிறாள்,மனதாற இன்னொரு திருமணம் செய்து கொள்கிறாள் ......இதெல்லாம் இயக்குனரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் !இன்றைய சமுதாயத்திற்கு தேவையான சிந்தனைகள் !
பொருப்பான இயக்குனர் சசியை பாரட்டுகிறேன் !நேரில் சந்திக்கவும் ஆசைப்படுகிறேன் !!
இயக்குனரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் !இன்றைய சமுதாயத்திற்கு தேவையான சிந்தனைகள் !
ReplyDeleteபொருப்பான இயக்குனர் சசியை பாரட்டுகிறேன்