விலகி இருங்கள்
அன்பாம் தியாகமாம் ,
கடமையாம் பொறுப்பாம்,
அன்னையாம் பாசமாம்
உரிமையாம் ஒட்டுதலாம்!
மாறும் உலகத்தை
மக்களின் வேகத்தைப்
புரிந்து கொள்ளாமல்
புலம்பும் பெரிசுகள் !
பத்து நாள் உணவை
பாதுகாத்து உண்கிறோம்,
பல மணி நேரம் உழைத்து
பணம் சேர்க்கிறோம்!
கப்பல் காரும்,அமிழும் சோபாவும்
கலக்கலாய் சமையலறை
கண்ணாடி குளியலறை
வசதியே வாழ்க்கையாய்!
மூடிய அறைக்குள்
மொத்த சந்தோஷமும்!
செல்போனும் சினிமாவும்
கணினியும் மனைவியும்!
படிப்பும் பதவியும்,
பணமும் பளபளப்பும்!
அனுபவித்துப் பார்க்கிறோம்
அசூயை வேண்டாம்!
எங்கள் வாழ்க்கை,எங்கள் வசதி
எங்கள் சம்பளம் எங்கள் விருப்பம்!
அட்வைஸ் வேண்டாம், ஆலோசனை வேண்டாம்
அருகில் வராமல் விலகி இருங்கள்!
Sunday, May 16, 2010
Friday, May 15, 2009
உதவ மனசிருப்பவர்கள் படியுங்கள்

ப்ளஸ் டூவில் 1200க்கு 1100மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருக்கிறாள் சித்ரா !! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்ராவின் தந்தை இறந்து விட்டார்.தாயார் கூலி வேலை செய்பவர்.இன்னும் இரண்டு தங்கைகள்.
அப்போது யாரோ சொன்ன ஆலோசனையில் சேவாலயாவில் வந்து தன் மூன்று பெண்களையும் பள்ளியில் சேர்த்தார் அந்த தாய்!!
சேவாலயாவில் படிப்பு,புத்தகங்கள்,உடை,சாப்பாடு எல்லாமே இலவசம்.
இதில் படித்துதான் இன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி அடைந்திருக்கிறாள் சித்ரா.
டாக்டராக வேண்டுமென்பது சித்ராவின் ஆசை.காசில்லை,கனவுகள் மட்டும் நிறைய இருக்கும் சித்ராவுக்கு உதவ மனசிருப்பவர்கள்
sevalayamurali@gmail
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
சேவாலயாவில் இப்படி 1000பேரைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முரளி.
ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு 1000ரூபாய் தேவை.
நாம் 1000பேர் ஆளுக்கு 1000ரூபாய் தந்து விட்டால் இந்தக் குழந்தைகள்
ஆனந்தமாய் படிக்குமே!!
வாருங்கள் ,இந்தக் கல்வி வேள்விக்கு நெய் ஊற்றுவோம்!!
Thursday, April 9, 2009
தமிழ் சினிமா மெல்ல இனி உருப்படும்


நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.தற்கால சினிமாவைப் பற்றியும்,
மிக அதிகமாக செலவு செய்தும் பல படங்கள் ஓடுவதில்லை என்றும் ல் வருத்தப்பட்டார்.
ஓரு சி்னிமா ஓடுவதற்கு கதையும்,அது சொல்லப்பட்டிருக்கும் விதமும் தான் காரணம் என்பது என் கருத்து ! வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன் . கிராமத்தில் நடக்கும் சாதாரணக் கதை ! நண்பர்கள் கபடி விளையாடுவதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.வெண்ணிலா கபடி குழு என்று குழுவிற்கு் பெயர் வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.போகுமிடமெல்லாம் தோற்றுப் போகிறார்கள்.
இதில் ஒருவன் மாரி.பள்ளியில் படிக்கும் வயதில் தந்தை இறந்து போக ஆடு மேய்க்க விற்கப் படுகிறான்.கபடியில் மோகம் கொண்ட மாரிக்கு காதலும் வருகிறது.திருவிழாவில் பார்க்கும்வெளியூர் பெண் ஒருத்தி மேல் காதல் வருகிறது மாரிக்கு.அடுத்த திருவிழாவில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறாள் அந்தப் பெண்.
கபடி விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் வெண்ணிலா கபடி குழுவினர்க்கு முறையான பயிற்சி தந்து பெரிய போட்டி ஒன்றில் விளையாட வைக்கிறார்.
பிரமாதமாக வி்ளையாடும் வெண்ணிலா கபடி குழு ஜெயித்து விடுகிறது.
ஆனால் மாரி செத்துப் போகிறான்.
பெரிய நடிகர்கள் என்று யாருமே இல்லாத படம்! ஆனால் விறு விறு என்று திரைக்கதை!மதுரைக்குளேயே இருப்பதைப் போல் உணர வைக்கும் மதுரைத் தமிழ்.
இப்படி கதையைத் தெளிவாக சொல்லத் தெரியும் இயக்குனர்கள் நிறையப் புறப்பட்டால் போதும் ,தமிழ் சினிமா மெல்ல இனி உருப்படும்!
Wednesday, March 18, 2009
Wednesday, March 4, 2009
ஆஸ்கார் வெற்றி தரும் செய்தி!

நாம் ஒவ்வொருவரும் இந்தக் கணம் நினைத்துப் பூரிப்பு அடையும் செய்தி ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி !ரஹ்மானைப் பற்றி வரும் தகவலில் எல்லாம் கூடவே வருகிறது அவரது தாயாரைப் பற்றிய செய்திகளும் !இந்த உயரத்திற்கு மகனைக் கொண்டு வர எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் அந்தத் தாய் !
தாயின் கனவை நனவாக்க எத்தனை உழைத்திருப்பான் இந்த மகன்!
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அந்தத் தாயும்,என் தாயின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்று ஓடிய மகனும்தான்,இந்த ஆஸ்கார் வெற்றி நமக்குத் தரும் செய்தி!
Sunday, March 1, 2009
கணக்கு சரி விடை தப்பு !

வெகு ஆவலாக நான் கடவுள் திரைப்படம் பார்தேன். கணக்கெல்லாம் சரியாகப் போட்டு விட்டு கடைசி வரியில் விடையைத் தப்பாகப் போட்டவிட்ட மாணவனின் விடைத்தாளைப் பார்த்தாற் போல இருந்தது.
பிச்சைக்காரர்களின் பரிதாப உலகத்தை இதை விட அற்புதமாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இந்த பரிதாபத்திற்கு சாவுதான் முடிவு என்பது தப்பித்துக்கொள்ளலாக இருக்கிறதே !
இது என் கோணம் என்று பாலா சொல்லலாம் ! அப்படி அவர் சொன்னால் அவரை இயக்குனர் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் சாதாரண மனிதனுக்கே தான் வாழும் சமூகத்தைப் பற்றிய பொறுப்பு இருக்க வேண்டும் . திரைப்பட இயக்குனருக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு வேண்டாமா ?
சொல்லப் போனால் இந்தக் கதைக்கு தப்பான நீதி சொல்லும் ஆர்யா பாத்திரமே வேண்டாம் .
பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை , கொடுமையை ,நிஜம் போலக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பாலாவை ”ஹோ” என்று பாராட்ட வேண்டும். படம் முடிந்து எழுந்து போகும் போது “இந்தக் கொடுமை ஒழிய என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று நினைக்கக் கூடியவன் கூட அவர்களுக்கு சாவு தான் வரம் என்று நினைக்குமாறு முடித்துவிட்ட பாலா மேல் கோபம் தான் வருகிறது .
Friday, February 13, 2009
பிராமணர்களின் மேல் சமூகத்தின் பார்வை

பிராமணர்களின் மேல் சமூகத்தின் பார்வை

சோவின் எங்கே பிராமணன் ஜெயா டிவியின் சமீபத்திய நல்வரவு .இன்றைய தேதியில் பிராமணர்களின் மேல் சமூகத்தின் பார்வை ,கேலி,துவேஷம்,வெறுப்பு இவைகளைப் பற்றியெல்லம் பேசுவதோடு பிராமணர்களின் அறியாமை,அலட்டல்,தவறுகள் இவற்றையும் அலசுகிறது இந்த தொடர்.பல இடங்களில் ,கேள்விகளை எழ வைத்து,அதற்கு சோ அவருக்கே உரிய பாணியில் ,தெளிவாக பதில் அளித்திருப்பது மிகவும் சிறப்பு .
பிராமணர்களே தங்கள் வழக்குப் பேச்சில் பேச வெட்கப்பட்டுக் கொண்டு ,எல்லாம் கலந்த ஒரு தங்கிலீஷில்,பேச ஆரம்பித்து விட்ட நேரத்தில் ...........
"அந்தந்த ஊர்க்காரர்கள் ,வேறு வேறு தமிழில் பேசும் பொழுது,பிராமணர்கள் அவர்களது தமிழில் பேசுவதை ஏன் கேலி செய்கிறீர்கள்" ..........என்னும் அவரது கேள்வி சர்வ நியாயமானதுதான்.
பிராமணர்களே தங்கள் வழக்குப் பேச்சில் பேச வெட்கப்பட்டுக் கொண்டு ,எல்லாம் கலந்த ஒரு தங்கிலீஷில்,பேச ஆரம்பித்து விட்ட நேரத்தில் ...........
"அந்தந்த ஊர்க்காரர்கள் ,வேறு வேறு தமிழில் பேசும் பொழுது,பிராமணர்கள் அவர்களது தமிழில் பேசுவதை ஏன் கேலி செய்கிறீர்கள்" ..........என்னும் அவரது கேள்வி சர்வ நியாயமானதுதான்.
"உங்கள் பேச்சில் தெரியும் பிராமண பாஷையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்" என்று சிலர்.....அன்பு...(ஆத்திரக் )கட்டளையிட்ட போது என்னுடைய பதில் கூட இப்படித்தான் இருந்தது.நாம் நாமாக இருக்க ஏன் வெட்கப்பட வேண்டும் என்கிற என் தீர்மானம் தான் அதன் காரணம்.
பிராமணர்கள் தங்களுடைய பல பழக்க வழக்கங்களுக்கு ,நம்பிக்கைகளுக்கு சரியான காரணங்களைத்தெரிந்து வைத்துக் கொள்ளாததும்,மற்றவர்கள் அவர்களை கேலி செய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இந்தத் தொடரில் பிராமணர்களின் பல பழக்க வழக்கங்களுக்கு ,நம்பிக்கைகளுக்கு சரியான காரணங்களை விளக்கங்களை சோ கொடுக்க ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
பிராமணர்கள் தங்களுடைய பல பழக்க வழக்கங்களுக்கு ,நம்பிக்கைகளுக்கு சரியான காரணங்களைத்தெரிந்து வைத்துக் கொள்ளாததும்,மற்றவர்கள் அவர்களை கேலி செய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இந்தத் தொடரில் பிராமணர்களின் பல பழக்க வழக்கங்களுக்கு ,நம்பிக்கைகளுக்கு சரியான காரணங்களை விளக்கங்களை சோ கொடுக்க ஆரம்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
பிராமணர்கள் தங்களைத் தாங்களாக வெளிக்காட்டிக் கொள்ளும் தைரியம் பெற இந்தத் தொடர் வழி செய்யும் என்பதே என் நம்பிக்கை ,ஆவல்.
Subscribe to:
Posts (Atom)

