Thursday, April 9, 2009

தமிழ் சினிமா மெல்ல இனி உருப்படும்






நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.தற்கால சினிமாவைப் பற்றியும்,

மிக அதிகமாக செலவு செய்தும் பல படங்கள் ஓடுவதில்லை என்றும் ல் வருத்தப்பட்டார்.

ஓரு சி்னிமா ஓடுவதற்கு கதையும்,அது சொல்லப்பட்டிருக்கும் விதமும் தான் காரணம் என்பது என் கருத்து ! வெண்ணிலா கபடி குழு படம் பார்த்தேன் . கிராமத்தில் நடக்கும் சாதாரணக் கதை ! நண்பர்கள் கபடி விளையாடுவதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.வெண்ணிலா கபடி குழு என்று குழுவிற்கு் பெயர் வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.போகுமிடமெல்லாம் தோற்றுப் போகிறார்கள்.

இதில் ஒருவன் மாரி.பள்ளியில் படிக்கும் வயதில் தந்தை இறந்து போக ஆடு மேய்க்க விற்கப் படுகிறான்.கபடியில் மோகம் கொண்ட மாரிக்கு காதலும் வருகிறது.திருவிழாவில் பார்க்கும்வெளியூர் பெண் ஒருத்தி மேல் காதல் வருகிறது மாரிக்கு.அடுத்த திருவிழாவில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறாள் அந்தப் பெண்.
கபடி விளையாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் வெண்ணிலா கபடி குழுவினர்க்கு முறையான பயிற்சி தந்து பெரிய போட்டி ஒன்றில் விளையாட வைக்கிறார்.
பிரமாதமாக வி்ளையாடும் வெண்ணிலா கபடி குழு ஜெயித்து விடுகிறது.
ஆனால் மாரி செத்துப் போகிறான்.
பெரிய நடிகர்கள் என்று யாருமே இல்லாத படம்! ஆனால் விறு விறு என்று திரைக்கதை!மதுரைக்குளேயே இருப்பதைப் போல் உணர வைக்கும் மதுரைத் தமிழ்.
இப்படி கதையைத் தெளிவாக சொல்லத் தெரியும் இயக்குனர்கள் நிறையப் புறப்பட்டால் போதும் ,தமிழ் சினிமா மெல்ல இனி உருப்படும்!