Friday, May 15, 2009

உதவ மனசிருப்பவர்கள் படியுங்கள்


ப்ளஸ் டூவில் 1200க்கு 1100மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்திருக்கிறாள் சித்ரா !! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்ராவின் தந்தை இறந்து விட்டார்.தாயார் கூலி வேலை செய்பவர்.இன்னும் இரண்டு தங்கைகள்.

அப்போது யாரோ சொன்ன ஆலோசனையில் சேவாலயாவில் வந்து தன் மூன்று பெண்களையும் பள்ளியில் சேர்த்தார் அந்த தாய்!!

சேவாலயாவில் படிப்பு,புத்தகங்கள்,உடை,சாப்பாடு எல்லாமே இலவசம்.

இதில் படித்துதான் இன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி அடைந்திருக்கிறாள் சித்ரா.

டாக்டராக வேண்டுமென்பது சித்ராவின் ஆசை.காசில்லை,கனவுகள் மட்டும் நிறைய இருக்கும் சித்ராவுக்கு உதவ மனசிருப்பவர்கள்

sevalayamurali@gmail

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

சேவாலயாவில் இப்படி 1000பேரைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முரளி.

ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு 1000ரூபாய் தேவை.

நாம் 1000பேர் ஆளுக்கு 1000ரூபாய் தந்து விட்டால் இந்தக் குழந்தைகள்

ஆனந்தமாய் படிக்குமே!!

வாருங்கள் ,இந்தக் கல்வி வேள்விக்கு நெய் ஊற்றுவோம்!!